#BREAKING: 74 நாள்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம்..!

Published by
murugan

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக  ஆஜராகி பதில் அளித்தார். கடந்த 2 நாட்களாக 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்,2 நாள்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின் சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். ஆறுமுகசாமி ஆணையத்திடம் உண்மையான பதிலை அளித்துள்ளேன். நேற்றும் இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் உரிய பதிலை உண்மையான பதிலை தெரிவித்துள்ளேன். நேற்றும் இன்றும் காலை, மாலை என 4 முறை விசாரணையில் பங்கேற்று சாட்சியம் அளித்து உள்ளேன். ஏழு முறை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இரண்டு முறை சொந்த காரணத்தினாலும், பட்ஜெட்டாலும் வர முடியவில்லை. இரண்டு முறை மட்டுமே சம்மன் பெற்றும் ஆஜராகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 74 நாள்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. முரண்பட்ட பதில்களை எதையும் நான் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. சசிகலா மீதான குற்றசாட்டுகளை நீக்கவே விசாரணை நடத்த கோரினேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.

தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சசிகலா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என தெரிவித்தார்.

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

17 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

54 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago