முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பலரும் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உழவர் திருநாளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…