சென்னையில் உள்ள என் வீட்டில் நான் ஒருவன் மட்டும் தங்கி இருப்பதால் தினமும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டும் பயன்படுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் பேசிய முதல்வர் தொடர்ந்து சில வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம்,பூண்டி,செம்பரப்பக்கம்,புழல் உட்பட அனைத்து ஏரிகளிலும் நீரானது முற்றிலுமாக வறண்டு போய் உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு மட்டும் தனியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதெல்லாம் உண்மையில்லை என்றும் நானே தினமும் இரண்டு பாக்கெட் நீரை மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…