IAS, IPS conference [Image Source:X/@TNDIPRNEWS]
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளின் மாநாடு கடந்த ஒரு சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் அரசின் தலைமை செயலாளர், அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டின் சட்ட – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
அப்போது முதல்வர் கூறுகையில், அரசுக்கு ஆலோசனைகளை எவ்வித தயக்கமுமின்றி, மக்கள் நலனை மையமாக கொண்டு வழங்க வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவோருக்கு இடமளிக்கக்கூடாது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அரசின் அறிவிப்பு மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றன.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…