பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டால் அதனை வேரோடு வேராய் மண்ணோடு மண்ணாய்ப் சாய்ப்போம் என மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமாகிய வைகோ அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் அண்மைக்காலமாகவே இந்தி பயிற்று மொழியாக்க பட வேண்டும்எனவும், பொது இடங்களில் தமிழுக்கு பதிலாக இந்தி இருப்பது தவறு எனவும் சர்ச்சைகளுடன் கூடிய வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று கூட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையம் சென்று இருந்த பொழுது கொரோனா பற்றி பெண் அதிகாரி ஒருவர் இந்தியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என கூறியதற்கு, அவர் நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்வு சாதாரணமாக விடக்கூடியது அல்ல இந்தியர்கள் இந்தி மொழி பேச வேண்டும் என்று தீர்ப்பு எப்போது வந்தது என கனிமொழி கூறி இருந்தார். இந்நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதையும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்ப்பது பன்முகத்தன்மைதான் என்பதையும் உணராமல், பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டால் அதனை வேரோடு வேராய் மண்ணோடு மண்ணாய்ப் சாய்ப்போம் என மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமாகிய வைகோ அவர்கள் கூறியுள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…