திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது பேசிய, அவர் வீரவணக்கம் நாள் கொண்டாட திமுகவை தவிர எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு அருகதை இல்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு கூறிக்கொள்வது, கடவுளை நம்பாத நான் வேலெடுத்து, அலகு குத்தி, விபூதி பூசி, வீதியில் அலைய தயார். ஆனால் எடப்பாடிபழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் சமஸ்கிருதத்திற்கு பதிலாக கந்தசஷ்டிகவசம் சொல்லி வழிபாடு நடத்த வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஆ.ராசா புயல் நிவாரணமாக கேட்கப்பட்ட 14 ஆயிரம் கோடியில் மீதமுள்ள 11 கோடியை தமிழகத்திற்கு மூன்று மாதத்திற்கு வாங்கி கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் என தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…