சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் என்ற நிபுணர் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், யார் சொன்னது, எவன் சொன்னது என்று கேட்டார். இதற்கு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டி வருகிறார் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர், அவர்தான் அதிமுகவா? பொறுப்பில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கட்சியில் கோடிக்கணக்கான பேர் பொறுப்பில் இருக்கிறார்கள். போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? சசிகலா ஒழிக என்று ஆயிரம் போஸ்டர் அடித்து ஒட்ட முடியும். நான் கூறினால் சசிகலாவுக்கு எதிராக நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர்கள் ஓட்டுவார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, உச்சநீதிமன்ற கால அவகாசம் அளித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநரை சந்தித்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…