ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் – மநீம

Published by
லீனா

கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட். 

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும, ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக நீட்தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர்  திருப்பி அனுப்பியாதிலிருந்து இந்த கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா 

இதனையடுத்து தமிழக சட்ட மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் நீட் மசோதாவை தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது திமுகவினர் மத்தியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்சபாவில் திமுக எம்பிக்கள் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி தொடர்ந்து  முழக்கம் எழுப்பினர்.

மக்கள் நீதி மய்யம் ட்வீட் 

இது குறித்து மக்கள் நீதி மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதனால் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும்.  இதற்கு உரிய கால அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.’ என பதிவிட்டுள்ளனர்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago