குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் எனக்கு கோபம் வரும்.. அமைச்சர் முத்துசாமி!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை என அமைச்சர் முத்துசாமி பேட்டி.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் எனக்கு கோபம் வரும். குடிப்வவர்களை விமர்சிப்பதற்கு பதில் அவர்களுக்கு ஆலோசனைகளை கூறுங்கள். கடுமையான பணிச் சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது அவர்களை குடிகாரர்கள் என கூறக்கூடாது. ஆனால், ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் தவறில்லை என்றார்.

மேலும், 90 ml டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக திட்டம் ஆய்வில் தான் உள்ளது. இதனால் டெட்ரா பேக்கில் வரவும் செய்யலாம், வராமலும் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மதுக்கடையின் வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் இல்லை. மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

21 வயதிற்குகீழ் உள்ளவர்கள் மதுவாங்க வந்தால் அன்பாக அழைத்து அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார். மேலும், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை. இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை.

இந்த சோதனையால் யாரும் தொய்வு அடைய போவதில்லை, சோதனை குறித்து முழு விவரம் வந்தவுடன் தெரிவிக்கப்படும். அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதில் இருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார். எனவே, சோதனை மூலம் எங்கள யாராலும் பயமுறுத்த முடியாது, இப்போதைக்கு அப்படி தான் சொல்ல முடியும் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

13 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

14 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

14 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

15 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

15 hours ago