பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர்,பேசிய எம்.பி கனிமொழி அவர்கள் ,”தற்போது உள்ள காலநிலை மாற்றம் என்பது நாம் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய நிலையில் இல்லை.காரணம்,இது நமது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை பாதிக்கக்கூடிய சூழலை உருவாக்கிவிடும்.ஏனெனில்,ஐபிசிசி ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதிகள் வெப்ப மயத்தின் காரணமாக பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனினும்,தமிழக அரசு தனது பட்ஜெட்டில் இந்த காலநிலை மாற்றத்தை கண்காணிப்பதற்காக தனி நிதியை ஒதுக்கியுள்ளது.” என்று கூறிய நிலையில்,“பூமித்தாய் என்று சொல்லாமல், பூமி தந்தை என்று சொல்லியிருந்தால் ஒருவேலை இயற்கைய அழிக்காமல் இருந்திருப்போமோ? என்னவோ!”,என்றும் கேள்வியெழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து,செய்தியாளர்கள் சந்திப்பில் எம்பி திருமாவளவன் கூறுகையில், “மனிதக்குலத்தின் செயல்பாடுகள் காரணமாகவே, புவி வெப்பமடைகிறது.இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கைகள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசப்படும்.மேலும், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை பாடப்புத்தகத்தில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…