ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி – முக்கிய தரகர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவனத்தின் முக்கிய தரகரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு.

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ். அதன்படி, ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவனத்தின் முக்கிய தரகராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

நூற்றுக் கணக்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வெங்கடேசன் வசூலித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் கைதான வெங்கடேசனிடம் இருந்து சொகுசு கார், ரூ.2.2 லட்சம் ரொக்க பணம், செல்போன், லேப்டாப் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், வெங்கடேசனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

7 minutes ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

37 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

1 hour ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

2 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago