அவைத்தலைவர் துரைசாமி கடிதத்தை புறக்கணியுங்கள் – துரை வைகோ பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ வேண்டுகோள்.

மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிருந்தார். அதில், மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். மதிமுக பொதுச்செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பின்னர் கட்சி விதிகள் பல்வேறு விதமாக மாற்றப்பட்டுள்ளன. மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது. மக்கள் மத்தியில் சமீப காலமாக அவப்பெயர் உண்டாகி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் பேச்சை கேட்டு கட்சியில் இணைந்த தொண்டர்கள் நலனுக்காக மதிமுகவை தாய் கழகத்தோடு (திமுக) இணைத்து விடுங்கள் என்று தெரிவித்து பல்வேறு விமர்சனங்ளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில், திருப்பூர் துரைசாமி கடிதத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,  ஜனநாயக உரிமைப்படி அவைத் தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும்.

சிலரது தூண்டுதலின் பேரில் அவைத் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதிலளித்துள்ளார். மேலும், கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

7 minutes ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

34 minutes ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

1 hour ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

2 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

2 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!

லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

2 hours ago