இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார்.

சென்னையை அடுத்து ஆதம்பாக்கத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் எனும் தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி, கோஆப் டெக்ஸில் இருந்த போதும் சரி, பல சாதனைகளை புரிந்த போதும் தமிழக அரசு என்னை அவமதித்துவிட்டது.

சுடுகாட்டில் படுத்திருக்க வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா என்று கேள்வி எழுப்புய அவர், அங்கிருக்கும் ஆவிகளை விட ஊழல் செய்யும் பாவிகள் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் எனவும் ஊக்கமளித்துள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் போன்று நேர்மையாக இருக்கவேண்டும் என்று கூறிய சகாயம், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவைகளுக்கு எதிராக தனது நேர்மையை கையாண்டார்.

இதுபோன்று ஒரு நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இவர் பணியாற்றும் இடங்களில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனும் வாசகத்தை எழுதி வைத்திருந்தார். இவரது சேவையால் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தான் அரசியலுக்கு வருவதாகவும், ஊழல் என்ற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 minutes ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

1 hour ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

3 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

3 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

3 hours ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

3 hours ago