Minister Mano Thangaraj [Image source : Information Technology Dept., Govt. of Tamil Nadu]
தற்போது நடைபெற்ற முதல் ஆய்வு கூட்டத்தில், எப்படி இந்த துறை செயல்படுகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். – புதிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.
தமிழக அரசின் அமைச்சரவையானது அண்மையில் மாற்றப்பட்டது. இதில் பால்வள துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த எம்எல்ஏ நாசர் விடுவிக்கப்பட்டு அமைச்சர் மனோ தங்கராஜூக்கு இலாகா மாற்றப்பட்டு பால்வளத்துறை பொறுப்பு வழங்ப்பட்டது.
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நடத்தினார். அந்த ஆய்வு கூட்டம் முடிந்தவுடன் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், பால்வளத்துறை என்பது மக்களுக்கான சேவையும், வியாபாரமும் சம்பத்தப்பட்ட துறையாகும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில், எப்படி இந்த துறை செயல்படுகிறது என்பதை இந்த முதல் ஆய்வு கூட்டத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம். தினந்தோறும் 34 லட்சம் லிட்டர் பால் ஆவீன் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. நிறைய பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பால் வளத்துறையினை நல்ல முன்னேற்றம் காணுவதற்கான வழிகள் , இந்த துறைக்கு இருக்கும் சவால்களை கண்டறிந்து அதனை சரி செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் அடுத்ததடுக்க நகர்வுகள் இருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…