TNGovt [File Image]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.900-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி அறிவித்தார். தற்போது இந்த உணவுத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விடுதிகள் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத்தொகை 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…