ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூவர் இறந்தனர்.
இந்த வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கமல், ஷங்கருக்கு உட்பட 23 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் வேண்டும் என கூறியிருந்தார்.நடிகர் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என கூறியது .
இந்நிலையில் இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்படிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் விபத்து குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…