இலங்கையை வந்தடைந்தது செரியபாணி பயணிகள் கப்பல்!!

Published by
கெளதம்

நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் சோதனையோட்டம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் இந்த சொகுசு கப்பல் போக்குவரத்துக்கு சேவை மூலம் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் செல்லலாம்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு.. நாகை – இலங்கை இடையே சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

இந்நிலையில், இன்று காலை நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல், தற்போது இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகையில் இருந்து காலை 8.15க்கு பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்த கப்பல் 4 மணி நேரத்தில் காங்கேசன்துறைக்கு சென்றடைந்ததுள்ளது.

தற்பொழுது, இலங்கையிலிருந்து இந்தியா செல்ல பயணிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 பேர் பயணிக்ககூடிய இந்த கப்பலில் முதல் நாள் பயணத்துக்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago