இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த மான் கி பாத் எனும் நிகழ்ச்சியை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில் தொடங்கினார். இந்த பிரதமரின் பேச்சு இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடமும், கடைகோடி மக்களிடமும் கொண்டு சேர்க்க அனைத்திந்திய வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த உரையானது, ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அகில இந்திய வானொலியில் பிரதமர் உரையாற்றுகிறார். பிரதமரின் இன்றைய உரையில், இந்தியாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடடிக்கைககள் குறித்தும், வைரஸை கட்டுப்படுத்த இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊராட்சி பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது நமது பிரதமர் முதல் முறையாக உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…