நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பாக தென் மாநிலங்களில் உள்ள தேயிலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தர உறுதிப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கையினை அதிரடியாக எடுத்து வருகிறது.
இந்நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், கேரளாவில், பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேயிலை உற்பத்தி நிறுவனங்கள், கிடங்குகள், உயிர் உரம் உற்பத்தி நிறுவனங்களில் கலப்படம், உற்பத்தி விபரம் குறித்து ரகசிய ஆய்வு செய்தது.
ஆய்வு தொடர்பாக அவ்வாரிய செயல் இயக்குநர் பாலாஜி கூறுயுள்ளதாவது :தமிழகம், கேரளாவில், தேயிலை கழிவுகளை கொண்டு உரம் தயாரிப்பதாக 22 நிறுவனங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களுக்கு உரிய தகவல் எதுவும் இல்லாமலும், சரிவர கணக்கு பராமரிக்காதது கண்டறியப்பட்டது.இதனால் சம்பந்தப்பட்ட 16 உர யூனிட்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உரிமம் பெறாத தேயிலை தூள் தயாரித்த தொழிற்சாலை, தேனிமாவட்டத்தில் கணக்கு பராமரிக்காத தொழிற்சாலை என மொத்தமாக 18 நிறுவனங்களின் உரிமம் ஆனது ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…