ஓபிஎஸ் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ அறிமுகம்!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஓபிஎஸ் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனித்து செயல்பட்டு வரும் நிலையில், தங்களது தரப்பு குரலை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஊடகம் ஒன்று தொடங்க திட்டமிட்டு வந்தார்.

அந்தவகையில் இன்று ஓபிஎஸ் தரப்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாளேட்டின் பிரதியை சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார். அதிமுக தரப்பில் நமது அம்மா என்ற நாளிதழ் வெளியாகி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், சேனலாக ஜெயா டி.வி-யும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சசிகலா, தினகரன் கட்சியை விட்டு விலக்கப்பட்ட நிலையில், தற்போது நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி ஆகிய நிறுவனங்களை டி.டி.வி.தினகரன், சசிகலா தரப்பு நிர்வகித்து வருகிறது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ‘நமது அம்மா’ என்ற புதிய நாளேட்டை தொடங்கினர். அதில்தான், அதிமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்பு, கட்சி நிகழ்ச்சிகள், கட்சி சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை வெளிவந்தன. பின்னர் ஒற்றை தலைமை பிரச்சனையால், ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், புதிய நாளேட்டை தொடங்கினார் ஓபிஎஸ்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

7 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago