peter alphonse [Imagesource : DTnext]
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவாகரத்தில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை காவல்துறையினர் தடுக்க முயன்றனர்.
அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆவடி காவல் எல்லை, அம்பத்தூர் தொழிர்பேட்டை யில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில். வழக்கு விசாரணைக்காக சென்ற காவலர்களை கம்பு, கட்டை, கல் போன்றவற்றால் வட மாநில தொழிலாளர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 28 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், சென்னை அம்பத்தூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் செய்த கலவரம் தமிழகத்தின் அமைதிச் சூழல்பற்றி முக்கிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிக்க் கடுமையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இதைப்போன்ற வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்தும்! தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…