திரைப்படத்தில் நடித்தால் மட்டுமே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா? – சீமான் காட்டம்.!

Published by
Muthu Kumar

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே நாட்டை ஆள்வதற்கு தகுதியாகி விடுமா என சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ், மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் கூடாது, பெற்றுக்கொள்ளவும் கூடாது என்று எனக்கு வலு சேர்க்கும் விதமாக பேசியதை வரவேற்கிறேன்.

தம்பி விஜய் அரசியல் வந்து நல்லது செய்ய விரும்புவதை வாழ்த்துவோம், அவர் பாதை வேறு, எனது அரசியல் பாதை வேறு. நல்லது செய்வதை வரவேற்க வேண்டும், தட்டிவிடக்கூடாது. சிறந்த அரசியல் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் வெற்றி பெற வைக்க முடிவதில்லை.

ஆனால் திரைப்படத்தில் நடித்தால் மட்டுமே ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்தும் தகுதி வந்துவிட்டது என்று கூறுவது அவமானம், இது என்றும் மாறாது. நாம் தான் மாற்றவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

29 minutes ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

54 minutes ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

1 hour ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

2 hours ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

2 hours ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

3 hours ago