மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நிதிகளை அறிவித்து வருகிறது.இதற்கு இடையில் தான் மத்திய அரசு தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதாவது,எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்துவதாக அறிவித்தது.அதாவது 2020-2021 மற்றும் 2021- 2022 ஆண்டுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எம்பிக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஈராண்டுகளுக்கு எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது. எதிர்க்கட்சி எம்பிக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…