பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனையின் போது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன் ஒருவர் போலீசாரால், தாக்கப்படும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது ஏவப்பட்ட சோதனையின் போது நமது அம்மா நாளிதழ் தாக்கப்பட்டது, இன்று முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள் மீது நடத்தப்படும் சோதனையின் பொழுது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன், திரு.ஆண்ட்ரூஸ் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர், இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…