மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைப்பு.? மாவட்ட ஆட்சியர் பேசியதாக வெளியான பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மே 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கைளை கூறினர். அப்போது குறிப்பிட்ட ஊராட்சி பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக கோரிக்கை எழுந்தது.

அதற்கு பதில் அளித்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், சில பகுதிகளில் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச சேவை உள்ளிட்ட காரணங்களால் வருவாய் குறைவு போன்ற காரணங்களாலும், தற்சார்பு வகையில் ஓடும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு, பேருந்து சேவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பேசியிருந்தார்.

சில காரணங்களால் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பது விரைவில் சரிசெய்யப்படும் என தான் கூறினேன். மகளிருக்கு இலவச சேவை வழங்கியதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக நான் கூறவில்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தி நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

46 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

1 hour ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago