மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைப்பு.? மாவட்ட ஆட்சியர் பேசியதாக வெளியான பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மே 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கைளை கூறினர். அப்போது குறிப்பிட்ட ஊராட்சி பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக கோரிக்கை எழுந்தது.

அதற்கு பதில் அளித்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், சில பகுதிகளில் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச சேவை உள்ளிட்ட காரணங்களால் வருவாய் குறைவு போன்ற காரணங்களாலும், தற்சார்பு வகையில் ஓடும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு, பேருந்து சேவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பேசியிருந்தார்.

சில காரணங்களால் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பது விரைவில் சரிசெய்யப்படும் என தான் கூறினேன். மகளிருக்கு இலவச சேவை வழங்கியதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக நான் கூறவில்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தி நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

28 minutes ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

51 minutes ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

2 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

3 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

3 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

4 hours ago