பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். பள்ளிக்கு வந்த அன்றே தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களுக்கு ஏற்கனவே தொற்று பாதிப்பு இருந்திருக்கும். எனவே, பள்ளிக்கு வந்த பின் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று பரவாமல் இருக்க உடனடியாக அவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். தொற்று கண்டறியப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…