SuVenkatesan [File Image]
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கான சேவையில் தமிழ், ஆங்கில போன்ற மாநில மொழிகள் நீக்கப்பட்டு, இந்தியில் மட்டுமே கிடைத்தது. இதனை கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்று பதில் தெரிவித்துள்ளது. அந்த பதிலில், நவம்பர் 1 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தில் (IVRS) மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
இந்த தற்காலிக மாற்றத்தினால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது. எங்களது ஐவிஆர்எஸ் சிஸ்டத்தின் மூலம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள் தடையின்றி பெறலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தை குறிப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், “சமையல் எரிவாயு முன்பதிவில் இந்தி. தவறு சரிசெய்யப்பட்டு தமிழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எனது கடிதத்திற்கு பதில். வருத்தம் தெரிவித்து ஐஓசி அறிக்கை. பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். இந்தி தடங்கல் நீக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…