ksalagiri [Imagesource : Times of india]
சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, முன்பு இந்திரா காந்தி ஒரு பெரிய ராணுவ பலத்தை வைத்துக்கொன்று எல்லோரையும் மிரட்டுகிறார் என்கின்ற ஒரு செய்தி வந்தது. பர்மா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நமக்கு பிரச்சனை இருந்தது. எனவே, அண்டை நாடுகள் எல்லாமே நமக்கு எதிராக ஐ.நா சபை உள்ளிட்ட மற்ற இடங்களில் பேசினார்கள்.
அப்படி ஒரு நட்புக்கரமாக எந்த வகையிலும் யாருக்கும் பயன்படாத ஒரு சிறிய நிலப்பகுதியை இலங்கையில் இருப்பவர்கள் தங்களது வலையை காய வைத்துக்கொள்ளலாம், வரலாம், போகலாம் மற்றும் தமிழ் மீனவர்களும் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு அன்றைக்கு இந்திய அரசாங்கம் கச்சத்தீவை கொடுத்தார்கள். இதில் இருவேறு கருத்து வேறுபாடு இருந்தது, ஜனநாயக நாட்டில் இதுபோன்று இருக்கும்.
அதை போய் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் அரசு துரோகம் செய்துவிட்டார்கள் என கூறுகிறார்கள். அதெல்லாம் துரோகம் கிடையாது, அப்படி பார்த்தால் ராஜிவ் காந்தி, இந்திய விமானத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் எல்லையை தாண்டி சென்று அனுமதி இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், யாழ்ப்பாணம் தமிழகர்களுக்காகவும் உணவு பொட்டலங்கள் வழங்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
அன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் கண்டனத்தை தெரிவித்தது, அதை பொருட்படுத்தாமல் நாங்கள் தான் செய்தோம், காங்கிரஸ் தான் செய்தது. இது எவ்வளவு பெரிய சேவை, தைரியமான விஷயத்தை காங்கிரஸ் தான் செய்தது. இதனால் சீமான் காங்கிரஸுக்கு எதிராக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சீமான் பேசுவது தவறு, அவரை எங்கள் கட்சியில் இருக்கும் ராகுல் கொதிக்கும் தெரியாது, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரியாது என்றார்.
என்றைக்கும் என்னை அழைத்து சீமானுக்கு எதிராக பேசுங்கள் என கூறவில்லை. நான் சீமானை தனிப்பட்ட முறையில் எதிராக பேசுனது கூட கிடையாது. இந்திய ஒற்றுமைக்கு எதிராக சீமான் பேசி வருகிறார். இந்தியாவில் ஒரு கலவரத்தை தூண்டும் விதமாக பேசுகிறார். மாநிலங்களுக்கிடையே இன கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இது ஒரு நல்ல அரசியலே கிடையாது என தெரிவித்தார். இதன்பின் காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பிரச்சனையை உருவாக்குவது பாஜகவினர் தான் என குற்றசாட்டினார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…