PMK Anbumani Ravi [Image-Representative]
ஆளுநர் நடுநிலையாக செயல்படவேண்டும், அரசியல் பேசக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் 15 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இது குறித்து கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கேட்கப்பட்டபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரும் ஆளுநரும் இணைந்து செயல்படவேண்டும், அதுதான் தமிழக நலனுக்கு நல்லது என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதனை செயல்படுத்துவது தான் ஆளுநர் கடமை. ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. ஆளுநர் என்பவர் நீதிபதிகளைப்போல், ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சியைச்சேர்ந்தவராக இருந்தாலும் அவரது அரசியல் கருத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார்.
தவறு நடந்தால் சுட்டிக்காட்டலாம், ஆனால் அதைவிட்டுவிட்டு அரசியல் கருத்து, கொள்கைகளை சொல்லக்கூடாது. நீதிபதிகள், ஜனாதிபதி இவர்கள் எல்லாம் எங்கும் அரசியல் பேசியது கிடையாது. அதேபோல் ஆளுநரும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…