ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
ஜி ஸ்கொயர்:
பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும், அதற்கு முன் தினமும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் ‘ரெய்டு’ நடத்தி வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
செட்டிநாடு குழுமம்:
இதற்கிடையில், வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதன் ஆவணம் மற்றும் பல்வேறு வங்கிகளில் வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில், செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறை மூன்றாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…