அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ,48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.இதனை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வந்து அத்திவரதர் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த 12 நாள்களில் 15 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பக்தர்கள் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இருப்பினும் 1லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று கோவில் வளாகத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தீபா வலிப்பு வந்த பக்தருக்கு விசிறிவிட்டு ,முகத்தில் தண்ணீர் அடித்து துடைத்து விட்ட பக்தருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தார்.
இதைத்தொடர்ந்து பின்னர் ஆம்புலன்ஸ் வர வைத்து அந்த பக்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெண் காவலர் தீபா செய்த இந்த நிகழ்வு அங்கு இருந்த மற்ற பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் பலர் காவலர் தீபாவிற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…