ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினருடன் இன்று மதியம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது எனவும்,அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து இன்று மதியம் மதியம் ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார்.அதன்படி,இன்று மதியம் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருமாறு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? அல்லது போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றப்படுமா? என்பது குறித்து ஆலோசனைக்கு பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…