[file image]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக பணியிடங்களுக்கு இன்று மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் http://arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எழுத்து தேர்வு, திறன் தேர்வு (செய்முறை), நேர்காணல் ஆகிவற்றின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. கடைசியாக இங்கு 2013-ம் ஆண்டுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படவில்லை. இந்த சமயத்தில் 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் – நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…