சவுக்கு சங்கர் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.. நீதிபதி சுவாமிநாதன் கூறியதென்ன.?

Published by
மணிகண்டன்

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது மே 12இல் குண்டாஸ் உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது கோவையில் நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்திற்கு எதிராகவும், ஆட்கொணர்வு மனுவையும் சவுக்கு சங்கர் தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பு பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, இன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் – பி.பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் இனி சட்டத்திற்கு அப்பாற்பட்டு உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பொதுவெளியில் கூற மாட்டேன் என உறுதியளிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோல நடந்துகொள்ள கூடாது என நீதிமன்ற அமர்வு அறிவுரை கூறியது.

மேலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டபோது சவுக்கு சங்கர் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு இருந்தால் அதனை தேசிய மனித உரிமை ஆணையம் 4 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு குண்டாஸ் சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்வதாக கூறினார். ஆனால், நீதிபதி பி.பி.பாலாஜி, குண்டாஸ் விதிக்கப்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கால அவகாசம் அளித்தார். இவ்வாறு இரு நீதிபதிகளும் இருவேறு தீர்பபை அளித்தனர். அடுத்து இரு நீதிபதிகளும் ஒருமித்தமாக, சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து மாற்றி  புழல் சிறைக்கு மற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன் என பரபரப்பு கருத்தை கூறினார். அவர்கள் இந்த வழக்கு இன்னும் கால அவகாசம் அளித்து நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் தான் இந்த வழக்கை இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன் என சவுக்கு சங்கர் வழக்கு விசாரணையில் தான் அளித்த உத்தரவுக்கு விளக்கம் அளித்து இருந்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

1 hour ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago