சவுக்கு சங்கர் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.. நீதிபதி சுவாமிநாதன் கூறியதென்ன.?

Published by
மணிகண்டன்

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது மே 12இல் குண்டாஸ் உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது கோவையில் நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்திற்கு எதிராகவும், ஆட்கொணர்வு மனுவையும் சவுக்கு சங்கர் தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பு பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, இன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் – பி.பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் இனி சட்டத்திற்கு அப்பாற்பட்டு உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பொதுவெளியில் கூற மாட்டேன் என உறுதியளிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோல நடந்துகொள்ள கூடாது என நீதிமன்ற அமர்வு அறிவுரை கூறியது.

மேலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டபோது சவுக்கு சங்கர் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு இருந்தால் அதனை தேசிய மனித உரிமை ஆணையம் 4 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு குண்டாஸ் சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்வதாக கூறினார். ஆனால், நீதிபதி பி.பி.பாலாஜி, குண்டாஸ் விதிக்கப்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கால அவகாசம் அளித்தார். இவ்வாறு இரு நீதிபதிகளும் இருவேறு தீர்பபை அளித்தனர். அடுத்து இரு நீதிபதிகளும் ஒருமித்தமாக, சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து மாற்றி  புழல் சிறைக்கு மற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன் என பரபரப்பு கருத்தை கூறினார். அவர்கள் இந்த வழக்கு இன்னும் கால அவகாசம் அளித்து நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் தான் இந்த வழக்கை இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன் என சவுக்கு சங்கர் வழக்கு விசாரணையில் தான் அளித்த உத்தரவுக்கு விளக்கம் அளித்து இருந்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

17 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

33 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

17 hours ago