annamalai [Imagesource : Theindianexpress]
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என அண்ணாமலை ட்வீட்.
நேற்றைய போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி இறுதிப்போட்டியில் களம் இறங்கியது. மழை குறிக்கீடு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இறுதிவரை போராடி கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை என அதிரடியாக விளையாடிய நிலையில், ஐந்தாவது முறை சென்னை அணி கோப்பையை வென்றது.
சென்னை அணியின் வெற்றியை பாராட்டி, பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெற்றிக்கு அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…