kamalahasan [Image source : medicircle]
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமலஹாசன் பரப்புரை
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.
கர்நாடகா தேர்தல் பரப்புரையில் களமிறங்கும் கமலஹாசன்
அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமலஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
கமலஹாசன் கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்பரை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று காலை திரு. ராகுல் காந்தி அவர்கள் தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் திரு. டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…