3-வது நாளாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை.!

Published by
Ragi

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டங்களையும், கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த இரு தினங்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கு கழகங்களுடன் கூட்டணி அமைக்காது,  மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று கமல்ஹாசன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 3-வது நாளாக ஆலோசனை நடத்தவுள்ளார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் 3-வது நாளாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டமானது காலையில் புதுச்சேரி சட்டமன்றத் நிர்வாகிகளுடனும்,  மாலையில் சென்னை மற்றும் புறநகர் சட்டமன்ற நிர்வாகிகளுடனும் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்காக வரும் போது அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பை கொடுக்க காரில் இருந்து நன்றியை கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இறுதி , ஆலோசனை தினமான இன்று கமல்ஹாசன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago