கோவைக்கு பயணத்தின் போது கமல்ஹாசன் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.
கோவை மக்களைச் சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாளை கோயம்புத்தூர் செல்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் வருகிற 01.08.2021 அன்று இரவு கோவை வருகிறார். 02-8-2021 மற்றும் 03-08-2021 அன்று கோவையில் இருந்தாலும், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பின்பற்றியும் மக்கள் பாதுகாப்பை கருதியும், கமல்ஹாசன் அவர்கள் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும்,கமல்ஹாசன் அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் கூடுவதையும் தவிர்க்க வேண்டுகிறேன். அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…