தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், கொரோனா நிவாரண நிதியாக ஹூண்டாய் நிறுவனம் அரசுக்கு ரூ.5 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் காரணம். 1996-2001, 2006-2011-ம் ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அதே போல தான் தற்போதைய தமிழக அரசும் உருவாக்குவதற்கு திட்டமிட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தான், நான் இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளேன்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் எதை தொடங்கி வைத்தாலும், அது எந்த அளவுக்கு செழிக்கும், பலருக்கு பயன்படும், காலங்கள் கடந்து நிற்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த ஹூண்டாய் நிறுவனம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…