தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூரில் அதிகளவு புகார்கள் வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது, C-Vigil என்ற தேர்தல் ஆணையத்தின் செயலிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நட்சத்திர வேட்பாளர்கள் நிறைந்துள்ள கோயம்பத்தூரில் 365 புகார்களில், 284 புகார்கள் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் 131 புகார்களில். 101 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 130 புகார்களில் 118 புகார்கள் மீது உண்மைத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் 127 புகார்களில் 47 புகார்கள் உறுதி செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தபால் வாக்கு செலுத்த 80 வயதுக்கு மேற்பட்ட 1,51,830 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் மாற்றுத்திறனாளிகளில் 45,568 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என கூறி, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…