சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் எதிர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பூ ஆதரவு தெரிவித்தார். இதனால், இவர் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நான் பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..? என கூறினார்.
இந்நிலையில், நாளை பாஜக தலைவர் ஜே.பி நாட்டா முன்னிலையில் குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு பதிலளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு, தற்போது வரை சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…