சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் எதிர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பூ ஆதரவு தெரிவித்தார். இதனால், இவர் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நான் பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..? என கூறினார்.
இந்நிலையில், நாளை பாஜக தலைவர் ஜே.பி நாட்டா முன்னிலையில் குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு பதிலளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு, தற்போது வரை சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…