மரத்தால் எழுந்த பிரச்சனை! மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சாப்டவேர் என்ஜினியர்!

Published by
மணிகண்டன்
  • கோவை மாவட்டம் கல்லுக்குழி எனும்பகுதியில் வசித்து வந்த சக்திவேல் என்கிற பொறியியலாளர் தன் வீட்டிலேயே எரித்து கொல்லப்பட்டுள்ளார்.
  • போலீஸ் விசாரணையில் எதிர்வீட்டு ஆனந்தகுமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் எரித்து கொன்றுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார் சக்திவேல். இவர் சாஃப்ட்வேர் என்ஜினீரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக கால் செய்யவில்லை என கூறி, இவரது தங்கை கணவர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார்.

வந்து வீட்டை திறந்து பார்த்துள்ளார். பார்த்தவருக்கு  பேரதிர்ச்சி. காரணம் வீட்டினுள் சக்திவேல் எறிந்த நிலையில் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் விசாரணையில், சக்திவேலின் எதிர்வீட்டில் வசித்து வந்துள்ள ஆனந்தகுமார் என்பவருக்கும் சக்திவேலுக்கும் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. சம்பவத்தன்று, சக்திவேலின் வீட்டின் முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது தொடர்பாக சக்திவேலுக்கும் ஆனந்தகுமாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த ஆனந்தகுமார் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து சக்திவேலை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சக்திவேல் இறந்துவிட்டார். உடனே சிரட்டை கரி, மண்ணெண்ணெய் கொண்டு சக்திவேல் உடலை சக்த்திவேல் வீட்டிலேயே எரித்துவிட்டார். இந்த அதிர்ச்சி தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சக்திவேலை கொன்று எரித்த ஆனந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் போலீசார் விசாரணையில் உள்ளனர்.

Published by
மணிகண்டன்
Tags: #Murderkovai

Recent Posts

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

7 minutes ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

1 hour ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

2 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

13 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago