3 நிற அட்டைகள் வழங்கி, மக்கள் நடமாட்டத்தை குறைக்க கும்பகோண அரசு புது முயற்சி!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல இடங்களிலும் அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக இருந்த ஊரடங்கு மேலும் அதிகரிக்கப்பட்டு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியில் வருபவர்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரவேண்டாம் எனவும், சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே வரவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நேரங்கள் அடிப்படையில் மக்கள் வெளியில் வரலாம் என அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் பொதுமக்களின் அதிகப்படியான நடமாட்டத்தை குறைப்பதற்காக மூன்று நிற அட்டைகள் வழங்கி உள்ளனர். அதாவது பச்சை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் இவர்களுக்கு வார்டு அடிப்படையில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
பச்சை நிற அட்டை கொண்டுள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீல நிற அட்டை கொண்டுள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அட்டை கொண்டுள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெளியில் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த அட்டைகளுடன் வருபவர்கள் கையில் ஸ்மார்ட் கார்ட் அல்லது ஆதார் அட்டை ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டிற்கு ஒரு நபர் தான் வெளியில் வர வேண்டும் எனவும் கும்பகோணத்தில் சட்டம் உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

24 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

41 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago