லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை -முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

Published by
Rebekal

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முருகன் சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

திருச்சியில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 30 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் அந்த கடையிலேயே சுரங்கம் போல சுவரில் ஓட்டை போடப்பட்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கியமான கொள்ளைக்காரர்களாகிய முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்பட்டது.

ஆனால் முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன் ஆகியோர் தான் சில தினங்களில் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு முருகன் அக்டோபர் 11 ம் தேதியும் சுரேஷ் அக்டோபர் 10-ஆம் தேதியும் செங்கம் நீதிமன்றத்தில் தாங்களாகவே வந்து சரணடைந்தனர். 25 கிலோ தங்க நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 162 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கை முருகன் மீதும் சுரேஷ் மீதும் தாக்கல் செய்யப்படாத நிலையில்,ஜே.எம்-1 நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முன்வந்தது.

இதனை அடுத்து விரிவான குற்றப்பத்திரிக்கை அவசர அவசரமாக தயார் செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கோசல்ராம் உட்பட 25 பேர் சாட்சிகளாக கொண்டு 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை அன்மையில் ஜே.எம்-1 முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறிய போது, முருகன் போன்றோருக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்கும் நோக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டோம். நீதிமன்ற விசாரணையில் முருகன், சுரேஷ் உள்ளிட்டோருக்கு விரைவில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் எனக் கூறியுள்ளனர்

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago