சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி முறையில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 160 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சோதனை முறையில் இரண்டு வாரங்கள் அமல்படுத்த உள்ளனர்.
முதற்கட்டமாக இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வு மட்டுமே நேரடி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…