சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் சேகர் பாபு பேட்டி.!

Published by
Muthu Kumar

சிதம்பரம் நடராஜர் கோயில் வழிபாட்டு விவகாரத்தில், தீட்சிதர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், தீட்சிதர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் கனகசபை விவகாரத்தில் அறநிலையத்துறை முடிவு செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையும் கனகசபை மீது வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தீட்சிதர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இது போன்று தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி மறுத்து பலகை வைத்துள்ளது. இது குறித்து தீட்சிதர்கள் மீது, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை செயலர் சரண்யா, தீட்சிதர்கள் வைத்த அனுமதியில்லை என்ற பலகையை அகற்ற முயன்றபோது, மிரட்டும் பாணியில் நடந்து கொண்டதாகவும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை  உதவியுடன் அனுமதி பலகையை அகற்ற முயலும்போதும் பனி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது, உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

5 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

6 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

7 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

7 hours ago