அதிகரிக்கும் கொரோனா ! “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்”- மு.க.ஸ்டாலின்

Published by
Edison

கொரொனோ 2வது அலை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்” என்று தமது கட்சி உடன்பிறப்புகளுக்கு தி.மு.க.தலைவர்.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரொனோ பரவல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,”தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் அனைத்து நேரத்திலும் மக்களுடன் இணைந்துள்ள இயக்கம்தான்  திராவிட முன்னேற்ற கழகம்.கடந்த ஆண்டு இதே கொரொனோ பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிட ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவு,மருத்துவ வசதி  போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கழக தொண்டர்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் கொடுத்து உதவினார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

அதேபோல தற்போது உள்ள சூழலிலும் மக்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனது அறிக்கையின் மூலமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் கபசுர குடிநீர்,முகக் கவசம்,சானிடைசர்,மற்றும் நீர்மோர் போன்றவற்றை தேவைப்படும் இடங்களில் மக்களுக்கு வழங்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அதுவரை காத்திருக்காமல் இப்பொது இருந்தே மக்களுக்கு உதவ வேண்டும் என்று ‘மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே’ என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago