[Image source : Then Indian Express ]
சென்னையில் கலால் துறை அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுக்கடைகள், மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணித்து, களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளின் மெத்தனால் உரிய உரிமதாரர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதையும் தொழிற்சாலை உற்பத்திக்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநில மது, கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…