10.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது! – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

Published by
மணிகண்டன்
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 9 மணி வரை 10.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நான்கு பதவிகளுக்கும் நான்கு விதமான நிறம் கொண்ட வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட வாக்கு பதிவில் காலை 9 மணி வரை தமிழகத்தில் 10.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில வாக்குச்சாவடிகளில் இருந்து புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

22 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

54 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

54 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago