சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அபாரம் விதித்த நிலையில், எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்பவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு. அவர்களின் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் போது அதை விமர்சனம் செய்ய கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ல் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த, நீதிபதி சுப்பிரமணியம் மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார். அதனை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது. இதில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொங்குநாடு என பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் காங்கிரஸ் கட்சி விடாது என்றும் கூறியுள்ளார். மேலும், கொங்குநாடு என கூறி தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது விஷமத்தனமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…